எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

திட்டங்கள் உள்ளதா?

பதினெட்டு வயது நிரம்பி காடன், கல்வி உதவித்தொகையில் தனக்கு ஒரு கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தான். உயர்நிலைப் பள்ளியில் ஒரு வளாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த அவன், புதிய சூழலில் இதேபோன்ற ஊழியத்தில் பங்கேற்க எதிர்பார்த்தான். அவன் தனது பகுதிநேர வேலையிலிருந்து பணத்தை மிச்சப்படுத்தினான். மேலும் ஒரு புதிய வேலையில் சிறந்த முன்னிலைப் பெற்றான். அவன் சில குறிக்கோள்களை மனதில் வைத்திருந்தான், எல்லாமே அட்டவணைபடி சரியாக நடந்து கொண்டிருந்தது.

பின்னர் 2020 வசந்த காலத்தில் எற்பட்ட ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடி எல்லாவற்றையும் மாற்றியது.

தனது முதல் செமஸ்டர் ஆன்லைனில் இருக்கக்கூடும் என்பதை பள்ளி நிர்வாகம் கேடனுக்கு தெரியப்படுத்தியது. அவனுடைய கல்லூரி வளாக ஊழியம் நிறுத்தப்பட்டது. அவனுடைய வேலை வாய்ப்பும் வறண்டுவிட்டது. அவன் விரக்தியடைந்தபோது, அவனது நண்பர், “ஆமாம், அவர்கள் வாயில் குத்து விழும் வரை அனைவருக்கும் ஒரு திட்டம் உள்ளது” என்ற ஒரு பிரபலமான குத்துச்சண்டை வீரரின் வார்த்தைகளை அவனுக்கு நினைவுபடுத்தினான்.

நீதிமொழிகள் 16, நாம் நம் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவிக்கும்போது, அவர் நம்முடைய திட்டங்களை உறுதிப்படுத்துவார், அவருடைய சித்தத்தின்படி காரியங்களைச் செய்வார் (வச. 3-4) என்று கூறுகிறது. இருப்பினும் உண்மையான அர்ப்பணிப்பு சற்று கடினமாக இருக்கும். இது நம்முடைய காரியத்தை நாம் சுயாதீனமாய் நம்முடைய போக்கில் செய்யாமல், தேவனின் வழிநடத்துதலுக்கான திறந்த இதயத்தை வரவேற்கிறது (வச. 9, 19:21).

நிறைவேறாத கனவுகள் ஏமாற்றத்தைத் தரக்கூடும். ஆனால் நம் எதிர்காலத்தைக் குறித்த நம்முடைய குறுகிய பார்வை, எல்லாம் அறிந்த தேவனுடைய திட்டத்தை எப்போதுமே ஈடுகட்ட முடியாது. நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போது, முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காணாதபோதும் அவர் நம் நடைகளை இன்னும் அன்பாக வழிநடத்துகிறார் என்பதில் உறுதியாக இருக்க முடியும் (16:9).

அக்கினியினால் தூண்டப்படுதல்

சோர்வுற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள், காலை உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டபோது, பணியாளர் இவர்கள் செய்திகளில் தோன்றினவர் என்று அடையாளம் கண்டு, அவர்கள் ஒரு கிடங்கின் தீயை எதிர்த்துப் ஒரு இரவு முழுவதும் போராடினார்கள்  என்பதை உணர்ந்தார். தனது பாராட்டுக்களைக் காட்ட , அவர் அவர்களின் ரசீதில் ஒரு குறிப்பை எழுதினார், “உங்கள் காலை உணவு இன்று என்னிடம் உள்ளது. நன்றி . . . மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவும், எல்லோரும் விட்டு ஓடும்  இடங்களுக்கு ஓடியதற்காகவும் . . . . நெருப்பால் தூண்டப்பட்டு, தைரியத்தால் இயக்கப்பட்டீர்கள், நீங்கள் எவ்வளவு சிறந்த ஒரு உதாரணம்." 

பழைய ஏற்பாட்டில், மூன்று இளைஞர்களின் செயல்களில் தைரியத்தின் ஒரு உதாரணத்தைக் காண்கிறோம்: சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ (தானியேல் 3). பாபிலோனிய ராஜாவின் சிலையை  வணங்குவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, இந்த இளைஞர்கள் தைரியமாக அதை  மறுத்ததன் மூலம் தேவன் மீதுள்ள அன்பைக் வெளிப்படுத்தினர். அவர்களின் தண்டனை அக்கினிச்சூளைக்குள் வீசப்பட வேண்டும் என்பதே. ஆனாலும் அந்த இளைஞர்கள் பின்வாங்கவில்லை: “நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை,…பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை. (வச. 17-18).     

தேவன் அவர்களை மீட்டார், அவர்களுடன் நெருப்பிலேயும் கூட உலாவினார் (வச. 25-27). இன்று நம்முடைய தீக்கனையான சோதனைகளிலும், தொல்லைகளிலும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது. அவரால் முடியும்.

ஆதரவின் வழியாக

ஜனவரி 28, 1986 அன்று, அமெரிக்க விண்வெளி விண்கலம் சேலஞ்சர்  புறப்பட்ட எழுபத்து மூன்று வினாடிகளில் உடைந்துபோனது. தேசத்திற்கு ஆறுதல் அளிக்கும் உரையில், ஜனாதிபதி ரீகன் "ஹை பிளைட்" என்ற கவிதையில் இருந்து, அதில் இரண்டாம் உலகப் போரின் விமானியான ஜான் கில்லெஸ்பி மாகி எழுதியுள்ள " விண்வெளியின் மிகைப்படுத்தப்படாத புனிதத்தன்மை" மற்றும் தனது கையை நீட்டி "தேவனின் முகத்தை" தொடும் உணர்வு பற்றி மேற்கோள் காட்டினார்.

தேவனின் முகத்தை நாம் உண்மையில் தொட முடியாது என்றாலும், சில சமயங்களில் நாம் அனுபவிக்கிற பிரம்மிக்கத்தக்க சூரிய அஸ்தமனம் அல்லது இயற்கையின் அமைதியான சூழல் அவர் அருகில் உள்ளார் என்ற சிறந்த உணர்வை நமக்கு அளிக்கிறது. சிலர் இந்த தருணங்களை “மெல்லிய இடங்கள்” என்று அழைக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் பிரிக்கும் இடைவெளி கொஞ்சம் மெல்லியதாக காணப்படுகிறது. தேவனை கொஞ்சம் நெருக்கமாக உணர்கிறோம்.

இஸ்ரவேலர்கள் பாலைவன வனாந்தரத்தில் தேவனின் அருகாமையை உணர்ந்ததால் ஒரு "மெல்லிய இடத்தை" அனுபவித்திருக்கலாம். தேவன் பாலைவனத்தின் வழியாக அவர்களை வழிநடத்த பகலில் மேக ஸ்தம்பத்தையும் இரவில் அக்கினி ஸ்தம்பத்தையும் வழங்கினார் (யாத்திராகமம் 40: 34-38). அவர்கள் பாளையத்திலே தங்கினபோது, "கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று" (வச. 35). அவர்களின் எல்லா பிரயாணங்களிலும், தேவன் அவர்களுடன் இருந்ததை அவர்கள் அறிந்தார்கள்.

தேவனின் படைப்பின் நம்பமுடியாத அழகை நாம் ரசிக்கும்போது, ​​அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது நமக்கு நனவாகிறது. நாம் ஜெபத்திலே அவருடன் பேசும்போது, ​​அவரது வார்த்தைகளை கேட்கும்போது, வேதவசனங்களைப் படிக்கும்போது, ​​எந்த நேரத்திலும் மற்றும் எங்கும் அவரோடு உள்ள ஐக்கியத்தில் மகிழலாம்.

அன்பான கடிந்துகொள்ளுதல்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என் அப்பா தனது படதொகுப்பில் சிறந்து விளங்க முயன்றார். அவரது ஆர்வம் தவறுகளைத் தேடுவது மட்டுமல்ல, தெளிவு, தர்க்கம், நிலையான ஓட்டம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் நகலை சிறந்ததாக்குவதாகும். அப்பா தனது திருத்தங்களை குறிப்பிட சிவப்பு நிற எழுதுகோலை விட ஒரு பச்சை எழுதுகோலையே பயன்படுத்தினார். பச்சை எழுதுகோலை “நட்பாக” அவர் உணர்ந்தார். அதே நேரத்தில் சிவப்பு நிற அடிக்கோடுகள் ஒரு புதிய அல்லது நம்பிக்கையற்ற எழுத்தாளரைக் பதற்றமளிக்கும் என்றெண்ணினார். ஒரு சிறந்த வழியை மென்மையாகச் சுட்டிக்காட்டுவதே அவரது நோக்கம்.

இயேசு மக்களை கடிந்துக்கொண்டபோது, ​​அன்பில் அவர் அவ்வாறு செய்தார். சில சூழ்நிலைகளில்-பரிசேயர்களின் மாய்மாலத்தை அவர் எதிர்கொண்டது போன்றவற்றில் (மத்தேயு 23) - அவர் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார், ஆனாலும் அவர்களுடைய நலனுக்காகதான். ஆனால் அவரது தோழியான மார்த்தாளின் விஷயத்தில் ஒரு மென்மையான கடிந்துக்கொள்ளுதல் மட்டுமே தேவைப்பட்டது (லூக்கா 10: 38–42). அவருடைய கண்டிப்புக்கு பரிசேயர்கள் மோசமாக பதிலளித்தாலும் மார்த்தாள் அவருடைய அன்பான சிநேகிதர்களில் ஒருவராக இருந்தார். (யோவான் 15:31-32).

திருத்தம் சங்கடமாக இருக்கக்கூடும், நம்மில் சிலர் இதை விரும்புகிறோம். சில நேரங்களில், நமது பெருமை காரணமாக, அதை சந்தோஷமாகப் பெறுவது கடினம். நீதிமொழிகள் புத்தகம் ஞானத்தைப் பற்றி அதிகம் பேசுகிறது, மேலும் “கடிந்து கொள்ளுதலைக் கேட்பது” ஞானத்திற்கும் புரிதலுக்கும் ஒரு அடையாளம் என்றும் குறிக்கிறது. (15: 31-32).

தேவனுடைய அன்பான கடிந்துக்கொள்ளுதல் நம் திசையை சரிசெய்யவும், அவரை மிகவும் நெருக்கமாக பின்பற்றவும் உதவுகிறது. அதை மறுப்பவர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள் (வச. 10), ஆனால் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் அதற்கு பதிலளிப்பவர்கள் ஞானத்தையும் புத்தியையும் பெறுவார்கள் (வச. 31-32).

விசுவாச முதலீடுகள்

தனது பன்னிரண்டாவது கிறிஸ்மஸ் தினத்தன்று, அந்தச் சிறுவன் மரத்தினடியில் பரிசுகளை திறக்க ஆவலுடன் காத்திருந்தான். அவன் ஒரு புதிய பைக்கிற்காக எதிர்நோக்கி கொண்டிருந்தான். ஆனால், அவனது நம்பிக்கை பொய்த்துப் போனது. கடைசியாக அவன் பெற்றது ஒரு அகராதி. முதல் பக்கத்தில் எழுதியிருந்ததை அவன் படித்தான். “அம்மா மற்றும் அப்பாவிடமிருந்து சார்லஸ்க்கு, 1958. அன்புடனும் பள்ளியில் உனது சிறந்த பணிக்கான மிக அதிக நம்பிக்கையுடனும்."
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த சிறுவன் பள்ளியில் சிறப்பாக செயலாற்றினார். கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் விமான பயிற்சி பெற்றார். அவர் வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு விமானி ஆனார். தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கும், இயேசுவை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தனது வேட்கையை நிறைவேற்றினார். இப்போது இந்தப் பரிசைப் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தான் நன்கு உபயோகித்திருந்த அகராதியை தனது பேரக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார். இது அவரது எதிர்காலத்தில் பெற்றோரின் அன்பான முதலீட்டின் அடையாளமாக மாறியது. அவர் அதை இன்னும் பொக்கிஷமாகக் கருதுகிறார். அனால் கடவுள், வேதாகம வசனங்களை பற்றி தினம்தோறும் அவருக்கு கற்பிப்பதன் மூலம் தனது நம்பிக்கையை வளர்ப்பதில் தன் பெற்றோர் செய்த அன்றாட முதலீட்டிற்கு அவர் இன்னும் அதிகமான நன்றியுள்ளவராக இருக்கின்றார்.
உபாகமம் 11 வேதாகமத்தின் வார்த்தைகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது."அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அதுகுறித்து பேசுவீர்களாக" (வச. 20).
இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவர் சிறுவனாக இருந்தபோது நடப்பட்ட நித்திய மதிப்புகள் வாழ்நாள் முழுவதும் அவரது இரட்சகருக்கான சேவையில் மலர்ந்தன. கடவுளின் செயல்பாட்டின் மூலம், ஒருவரின் ஆத்தும வளர்ச்சியில் நமது முதலீடு எவ்வளவு பலனளிக்கும் என்பதை யார் அறிவார்.

சிறிய மீன்

சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த ஒரு தம்பதியினருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தங்கள் ஊரிலே வசித்து வந்தார். அநேக முறை இயேசுவின் அன்பைக் குறித்து அவருக்கு பகிர்ந்து வந்தனர். அவரின் இரட்சிப்பையும் குறித்து அவருக்கு அறிவித்து வந்தனர். இப்படிப்பட்ட மிகப் பெரிய உண்மையை உணர்ந்தும் தம் வாழ்க்கையை வேறொரு மதத்தின் நிமித்தம் விசுவாசத்திற்கு தம்மை ஒப்புக்கொடுக்க தயங்கினார். சிறிதளவு அவர் பண ரீதியாகவும் யோசித்தார். தாம் வழிபடும் மதத்தின் ஒரு தலைவராக இருந்தபடியால் பணப்பற்றாக்குறை தயக்கமும் அவர் மத சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் மரியாதை விடும் என்ற பயமும் இருந்தது.

வருத்தத்துடன் அந்த தம்பதியினிரடம் “ஓடுகிற நதியில் கைகளைக் கொண்டு மீன் பிடிப்பவனைப் போல் இருக்கிறேன். சிறிய மீன் ஒன்றை பிடித்து விட்டிட்டேன், ஆனால் பெரிய மீன் ஒன்று போவதைப் பார்க்கிறேன். அந்த பெரிய மீனை பிடிப்பதற்கு இந்த சிறிய மீனை நான் விட வேண்டியதாய் இருக்கிறது.!”

மத்தேயு 19-ல் இருக்கும் அந்த பணக்கார வாலிபனும் இதே போல் ஒரு சூழ்நிலையில் தான் காணப்பட்டான். இயேசுவிடம் வந்து “நித்திய ஜீவனை பெற நான் என்ன செய்ய வேண்டும்?” (வச 16) என்று கேட்க்கும்போது ஆர்வத்துடன் கேட்பது போல் இருந்தாலும் தன ஜீவனை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைக்க மனதில்லை. அவன் பணத்தில் மாத்திரம் ஐஸ்வர்யாவானாக இருக்கவில்லை, தம் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் மிகவும் பெருமை உடையவனாய் இருந்தான்.நித்திய ஜீவனை அடைய வாஞ்சித்தாலும், இயேசுவை வெறுத்து மற்றவைகளை நேசித்தவனாக காணப்பட்டான்.

தாழ்மையுடன் நம் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்து, அவர் நமக்களித்த இலவச இரட்சிப்பை ஏற்றுக்கொண்டால், “என்னை பின்பற்றி வா” என்று அழைக்கிறார்.

இடைவிடாத அன்பு

ஹேடி மற்றும் ஜேஃப், உஷ்ணமான பருவநிலையில் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையலிருந்து தங்களுடைய வீட்டிற்க்கு வந்தனர். குளிர் காலம் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு அருகில் குடும்பமாக தங்கினர். அவர்களுடைய பத்து பிள்ளைகளில் பலருக்கு இதுவே பனியின் இயற்க்கை அழகை கண்ட முதல் அனுபவமாக இருக்கும்.

ஆனால் இங்கிருக்கும் குளிர்ச்சியான பருவநிலைக்கு அநேக வெதுவெதுப்பான உடைகள், மேல் சட்டை, கையுறைகள், மற்றும் பூட்ஸ் ஆகியவை தேவைப்படும். ஒரு பெரிய குடும்பத்திற்கு, வரப்போகும் இந்த கடுமையான குளிர் காலத்திற்கான உடைகளுக்காகும் செலவு மிக அதிகமாகும். ஆனால் தேவன் அதை சந்தித்தார். முதலில் ஒரு அண்டை வீட்டுகாரர் காலணிகள், பின்பு பனியில் அணியும் கால் சராகை, பின்பு தொப்பி மற்றும் கையுறைகளை கொண்டுவந்தார். பின்பு ஒரு தோழி தன்னுடைய சபையிலுள்ள மற்றவர்களை, அந்த குடும்பத்திலுள்ள பன்னிரெண்டு பேருக்கும் பொருத்தமான அளவிலான வெதுவெதுப்பான உடைகளை சென்று சேகரிக்க சொன்னார். பனி பொழிய தொடங்கியபோது, அந்த குடும்பத்திற்கு சரியாக எது தேவையோ அனைத்தும் அவர்களிடமிருந்த்து.

தேவனுக்கு ஊழியம் செய்யும் வழிகளில் ஒன்று தேவையுள்ளவர்களுக்கு ஊழியம் செய்வது. 1 யோவான் 3:16-18 நம்முடையவைகளின் ஏராளத்திலிருந்து மற்றவருக்கு உதவுவதை ஊக்குவிக்கிறது. ஊழியம் செய்வது நாம் இன்னும் அதிகமாய் இயேசுவை போல் மாற உதவுகிறது. மக்களை எப்படி அவர் அன்புகூர்ந்து, காண்கிறாரோ அப்படியே நாமும் செயல்பட தொடங்கிறோம்.

தேவன் பெரும்பாலும் தன்னுடைய பிள்ளைகளை கொண்டே தேவைகளை சந்திக்கவும் மற்றும் ஜெபத்திற்கு பதிலளிக்கவும் செய்கிறார். நாம் ஊழியம் செய்யும்போது மற்றவர்கள் உற்சாகம் அடைவது போல நாமும் உற்சாகம் அடைகிறோம். அதன் பலனாக, புதிய வழிகளில் நாம் ஊழியம் செய்ய தேவன் நம்மை தயார் செய்யும்போது நம்முடைய விசுவாமும் வளர்கிறது (வச.18).

மக்கள் மறந்துவிடுவார்கள்

ஒரு பெண்  தன் போதகரிடம் சென்று "ஏன் எப்போதும் ஒரே காரியத்தை குறித்து உபதேசம் செய்து வருகிறார்?" என்று கேட்டாள். அதற்க்கு அவர் "மக்கள் மறந்துவிடுவார்கள்" என்று பதிலளித்தார் .

நாம் மறப்பதற்கு அநேக காரணங்கள் உண்டு - காலம் கடந்துபோவதினால், வயதாகுவதினால், அல்லது அதிக வேலைநிமித்தமாக கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக மற்றவர்களின் பெயர், தேதிகள், முக்கியமான சில தகவல்கள் என்று பல உண்டு. எனது கணவர் அடிக்கடி சொல்வதுண்டு "புதிதாக ஒன்றை நியாபகம் வைத்துகொள்ள வேண்டுமானால், பழையதை ஒன்றை மனதிலிருந்து எடுத்துப்போட வேண்டியதாய் இருக்கிறது".

அந்த போதகர் சொன்னது சரிதான் "ஜனங்கள் மறந்துவிடுவார்கள்". முக்கியமாக தேவன் நமக்கு செய்த காரியங்களை இஸ்ரவேல் மக்களை போல நாமும் மறந்து விடுகிறோம். தேவன் அவர்களுக்கு செய்த பல அற்புதங்களை கண்டும், காலப்போக்கில் தேவன் அவர்களுக்கு அதை நினைவுபடுத்த வேண்டியதாய் இருந்தது. உபாகமம் 8ல் தேவன் அவர்களை தனிமைப்படுத்தி தங்களை பாதுகாத்து வந்ததினால் முழுமையாய் அவரில் சார்ந்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. வனாந்தரத்தில் அவர்களை பசியினால் சோதித்து மன்னாவை தந்து, அவர்களின் வஸ்திரங்கள் பழையதாய் போகாதபடிக்கு, சர்பங்களுக்கும் தேள்களுக்கும் தப்புவித்து, பாறையிலிருந்து தண்ணீர் தந்தது என அவர் செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த அதிகாரத்தில் அவர் நினைவுபடுத்தினார்.

தேவனுடைய "உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது" (சங். 100:5) . நம் இனி மறக்கும் சூழ்நிலையில் காணப்பட்டால் இதுவரை அவர் நம் ஜெபங்களுக்கு பதிலளித்ததை நினைவு கூறுவோம். அது  முழுமையாக அவர் நமக்களித்த நன்மைகளையும், வாக்குத்தத்தங்களையும் நினைவுபடுத்தும். 

பலமும் தைரியமும்

ஒவ்வொரு இரவும் தன்னுடைய கண்களை மூடும்போது இருள் தன்னை சூழ்வதை காலேபு உணருவான்.  கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் இருக்கும் மரத்தினால் செய்யப்பட்ட அவனுடைய வீடு அவ்வப்போது உராய்வதினால், அந்த அறையின் நிசப்தம் கெடும். பிறகு பலகணிகளில் உள்ள வவ்வால்கள் ஆட்டம் பிடிக்கும். அவனுடைய அம்மா அவன் அறையில் ஒரு சிறிய விளக்கை வைத்திருந்தார்கள். ஆனாலும் அவன் இருட்டுக்கு பயப்படுவான். ஒருநாள் இரவில் அவன் அப்பா அவனுடைய படுக்கை கால்மாட்டில் ஒரு வேத வசனத்தை மாட்டி  வைத்தார். அது யோசுவா 1:9: “பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” அந்த வசனங்களை ஒவ்வொரு ராத்திரியும் படிப்பான் காலேபு. அவன் கல்லூரி சேர்கிறவரை அந்த வசனத்தை வைத்திருந்தான்.

யோசுவா முதலாம் அதிகாரத்தில், மோசே இறந்தபின் தலைமை யோசுவாவுக்கு மாறுவதை பற்றி படிக்கிறோம். “பலங்கொண்டு திடமனதாயிரு” என்ற கட்டளை திரும்பத் திரும்ப – அவர்கள் அதன் முக்கியத்தை உணரத்தக்கதாக - யோசுவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் கொடுக்கப்பட்டது (வச. 6,7,9). எதிர்காலம் நிலையற்றது போல் காணப்பட்டதால் இஸ்ரவேலர் கலங்கினார்கள். அப்பொழுது தேவன் அவர்களுக்கு உறுதி அளிக்கும் வகையாக “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்றார்..

பயப்படுவது இயற்கைதான் என்றாலும் நீடிய பயம் நம்முடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் பாதிக்கும்.  அந்த காலத்தில் ஆண்டவர் தம்முடைய ஊழியக்காரர்களை  ஊக்குவித்தது போலவே நாமும் அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பினால் பலங்கொண்டு திடமனதாயிருக்கலாம்.